கந்துவட்டி கொடுமை! வீட்டை பூட்டி, இளம்பெண்ணை வெளியேற்றினார் பா.ஜ. நிர்வாகி கைது

viduthalai
2 Min Read

நெல்லை, ஜூன் 16- கந்துவட்டி தராத இளம் பெண்ணை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு மிரட்டிய நெல்லை பாஜ நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளை யம், சேவியர் காலனியை சேர்ந்தவர் டென்னிசன் (36). இவரது மனைவி பிரின்சி (30). இவர்கள், சிட்பண்ட் நடத்தி வருகின்றனர். தொழில் அபிவிருத்திக்காக டென்னிசன், கடந்த 2023இல் தச்சநல்லூரை சேர்ந்த பாஜ மாவட்ட துணை தலைவர் மேகநாதனிடம்(45) வட்டிக்கு ரூ20 லட்சம் கடன் வாங்கினார். இதற்குரிய வட்டியாக அன்றாடம் ரூ.20 ஆயிரத்தை டென்னிசன், மேகநாதனிடம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் 2 மாதங்களாக கந்துவட்டியான ரூ.20 ஆயிரத்தை வழங்க முடியாமல் டென்னிசன் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன், 2 மாதங்களுக்கு முன்பு டென்னிசன் வீட்டிலிருந்த அவரது காரை பறித்துக் கொண்டார். மேலும் டென்னிசன் மனைவியான பிரின்சியை மிரட்டி பத்திரப் பேப்பரில் வீட்டை அடமானமாக பெற்றுக்கொண்டதாக கையெழுத்து பெற்றார்.

இந்நிலையில் மேகநாதன் 13.6.2025 அன்று டென்னிசன் வீட் டிற்குள் சிலருடன் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளி வீட்டிற்கு வெளியே வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பொருட்களை வீட்டிற் குள் வைத்தார். பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றி வீட்டை பூட்டி சென்று விட்டார். இதனால் வீட்டிற்கு வெளியே டென்னிசனும் அவரது குடும்பமும் தங்குவதற்கு இடமில்லாமல் நிர்கதியாக நின்றனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர் வினோத் சாந்தாராமிடம், டென்னிசன் இணையர் புகார் மனு அளித்தனர். இதனை விசாரித்த அவர், மேகநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேலப்பாளையம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். காவல் துறையினர் விசாரணை நடத்தி கந்துவட்டி, அவதூறாகப் பேசியது, மிரட்டல், வீட்டை பூட்டியது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பாஜ மாவட்ட துணை தலைவர் மேகநாதனை கைது செய்தனர்.

மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மேலப் பாளையம் காவல் நிலையத் திற்கு காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். அங்கு பாத்ரூமுக்கு சென்றமேகநாதன் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக காவல் துறையினர் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களிடம் மேகநாதன் வயிறு வலிப்பதாக கூறியதால் சிகிச்சை அளித்தனர்.

14.6.2025 அன்று மாலை 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் விசாரித்து, வருகிற 27ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மேகநாதன் விசாரணை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப் பட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *