திருவையாறு, ஜூன் 16- திருவையாறு தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல மணவிழாவில் இன்று (16.6.2025) பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் பேரறிஞர் அண்ணா. நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.
தமிழ் மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத்தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தொடர்ந்து கோருகிறோம்.
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து மேலும் பல்வேறு தகவல்களைக் கூறி உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.