குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

1 Min Read

திருவையாறு, ஜூன் 16- திருவையாறு தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல மணவிழாவில் இன்று (16.6.2025) பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் பேரறிஞர் அண்ணா. நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

தமிழ் மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத்தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தொடர்ந்து கோருகிறோம்.
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து மேலும் பல்வேறு தகவல்களைக் கூறி உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *