மதிப்புறு விரிவுரையாளர்கள் 5699 பேர் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை

1 Min Read

சென்னை ஜூன் 23 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி யிடங்களில் மதிப்புறு விரிவுரையாளர்களை தொகுப் பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக துறையின் செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ் நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,699 மதிப்புறு விரிவுரையாளர்களை நியமிக்கலாம். இவர்களுக்கு 11 மாதங்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் தொகுப் பூதியம் வழங்கப்படும். அதற்கான செலவினமாக ரூ.125 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *