மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

Viduthalai
1 Min Read

மதுரை,  ஜூன் 23 –   மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுல்வாலா தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமை நீதி பதியாக பொறுப்பேற்ற பின்பு முதல் முறை யாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு   நேற்று (22.6.2023) வருகை தந்தார். அவருக்கு உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கங்காபுர்வாலா பேசிய தாவது: சிலப்பதிகாரம் எனும் பெரும் காப்பியம் உருவாக காரணமாக இருந்த நகரம் மதுரை. பெருமை மிக்க மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி. வழக்குரைஞர்கள் தங்களின் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். சக நீதிபதிகள், வழக்குரைஞர்களின் உறுதுணையாக செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *