சென்னை, ஜூன் 15- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:-
முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்று 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சியோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
குற்றாலத்தில் பெரியாரியல்
பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்த ஏற்பாடு
தென்காசி, ஜூலை 15- குற்றாலத்தில் 46 -ஆவது ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை. ஜூலை-10,11,12,13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சிறப்பான ஏற்பாடுகளைச் செய்வதென தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
8.6.2025 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கழக காப்பாளர் சீ.டேவிட்செல்த்துரை தலைமை வகித்தார். கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார். கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
மாவட்டத்தலைவர் வழக்தகுரைஞர்.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மாநில ப.க.துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, மாவட்டத் துணைத்தலைவர் ம.செந்தில்வேல், மாவட்ட மாணவர் கழக செயலாளர் சீ.செங்கதிர்வள்ளுவன்,கழக பொறுப்பாளர்கள் தங்கராஜ், கருப்புச்சாமி, செல்வமணி,சாமிதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.