பெரம்பலூர், ஜூன்,14- பெரம்பலூர் மாவட்ட திமுக மேனாள் செயலாளர், ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற மேனாள் உறுப்பினர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரின் தந்தையான மறைந்த எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை,
மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்