அமைச்சர் சிவசங்கர் அவர்களின் தந்தையின் நினைவு நாள்

1 Min Read

பெரம்பலூர், ஜூன்,14- பெரம்பலூர் மாவட்ட திமுக மேனாள் செயலாளர், ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற மேனாள் உறுப்பினர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரின் தந்தையான மறைந்த எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை,

மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *