பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் சிறப்புக் கருத்தரங்கம்

1 Min Read

பெரம்பலூர், ஜூன் 15- பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” எனும் 10ஆவது மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் 14.06.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காப்பாளர் ந.ஆறுமுகம், துரைசாமி, அண்ணாதுரை, ஆதி சிவம், ஆகியோர் முன்னிலையில் மாவட்டத்தலைவர் சி.தங்கராசு தலைமையில் “பெரியார் வழியில் கலைஞர்”எனும் தலைப்பில் வை.தேனரசன் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்குப் புதிய தோழர்கள் வருகை புரிந்தது சிறப்பாக இருந்தது.இராமர், கார்முகில், சாரதி, செல்வம், செல்வமணியன், முத்துசாமி, சிற்றரசு, வின்சென்ட்,கோபிநாத், சுரேஷ்குமார் மற்றும் பலர் வருகை புரிந்து கருத்துரைகளை கேட்டனர். ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *