கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசை விட தமிழ்நாடு அரசு அதிக நிதி அளித்துள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் தேர்தலில் போட்டியிடும் இடங்களை பங்கிடுவது குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை; ஜூலை மாதத்தில் இறுதி செய்யப்படும் என அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய உண்மை ‘பாஜக-ஆர்எஸ்எஸ் ஸ்கிரிப்டுக்கு பொருந்தாது’; கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. ஆனால் கடும் பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை புறந்தள்ளுகிறார்கள். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.

* பீகார் ஆர்ஜேடியின் புதிய தலைவராக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மங்கனி லால் மண்டல் பொறுப்பேற்க உள்ளார்.

எகனாமிக் டைம்ஸ்:

* ஏர் இந்தியா விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், விமான விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்தியாவின் விமானப் பாதுகாப்புக் கொள்கையை மறுசீரமைப்பு குறித்து உள்துறைச் செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு குழு ஆலோசனைகளை பரிந்துரைக்கும்.

குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *