ஈரோடு, ஜூன் 15 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,681 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்றுமுன்தினம் 851 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 3,681 கன அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.31 அடி; நீர் இருப்பு 17.50 டிஎம்சி; நீர் திறப்பு 855 கனஅடியாக உள்ளது.