பா.ஜ.க. பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி

Viduthalai
1 Min Read

அரசியல்

பாட்னா, ஜூன்23- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் பாஜக தனது செல் வாக்கை இழந்துவிட்டது என்றும் அங்கெல்லாம் பா.ஜ.க.வை காண முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னா வில் தற்போது நடைபெற்று வரு கிறது. .

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் தற்போது சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற் றுமைப்படுத்துவதற்கான சித்தாந் தத்துக்கும், ஒற்றுமையை சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே இந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டில் வெறுப்பையும் வன் முறையையும் பா.ஜ.க. பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துகிறது. நாம் அன்பையும், ஒற்றுமையையும் பரப்புவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்று கூடி இருக்கிறோம்.

இந்தக் கூட்டத்தில் உங்கள் மத்தி யில் நான் சொல்கிறேன். தெலங் கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வை எங்கேயும் பார்க்க முடிய வில்லை. அந்தக் கட்சி செல்வாக்கை இழந்து விட்டது. இந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். வரும் நாடாளு மன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏனெனில், நாம் ஏழைகளின் நலனுக்காக பாடுபடு கிறோம். ஆனால், பா.ஜ.க. 2-3 தொழி லதிபர்களின் நலனுக்காகப் பாடுபடு கிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருகிறது. கருநாடகாவில் பாஜக தோற் கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *