ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஆம்பூரில் வசிக்கும் இளங்கோவன், திராவிட இயக்க நூற்றாண்டு நூலகத்தை நடத்தி வருகிறார். ‘குடிஅரசு’ இதழ் கவிதைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.பில்., பட்டம் பெற்றார். ஆய்வுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேருதவி புரிந்தார். ‘விடுதலை’ இதழின் நீண்ட நாள் வாசகரான இவர் தனது இல்லத்திற்குத் ‘தந்தை பெரியார் தமிழ் பண்ணை’ என பெயர் சூட்டியுள்ளார். இவரது குடும்பத்தினர் கழகக் கொள்கைகளை 12 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் திராவிட இயக்க கொள்கையில் மூன்றாம் தலைமுறையினரான பாரி மற்றும் அவரது குடும்பத்தினர், இராஜகுமாரி, இளங்கோவன், பாவை, மருதன் ஆகியோர் தமது இல்லத்தில் தந்தை பெரியார் சிலையினை திறந்து வைத்துள்ளது அவர்களது கொள்கையை பறைசாற்றும் முக்கிய நிகழ்வாகும்.
இளங்கோவன் – ராஜகுமாரி ஆகியோரின் மூன்றாம் தலைமுறையினர் தமது இல்லத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books