கங்கை சமவெளியைப் போலவே பழைமையான
கீழடி நாகரிகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததே!
பன்னாட்டு அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன!
சென்னை, ஜூன் 14– கீழடி ஆய்வுகளின்படி தமிழர்களின் தொன்மையான நாகரிகம் பழைமை யானவை என்பதை பன்னாட்டு அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக உரிய ஆதாரங்களுடன் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு நேற்று (13.06.2025) செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் தமிழாக்கம் வருமாறு:–
இந்தியாவின் இரண்டாவது நகரமய மாக்கல்: கீழடி- கங்கை சமவெளியைப் போலவே பழைமையானது என்பது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது; ரேடி யோகார்பன் டேட்டிங் ஆய்வின் மூலம் கீழடி நாகரிகம் கி.மு.580அய் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கண்டறி யப்பட்ட தொல்லியல் எச்சங்கள் மதுரையில் உள்ள கீழடியின் தளம் தமிழ்நாட்டின் கடந்த காலத்தின் மற்றொரு அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆய்வகமான ‘பீட்டா அனலிட்டிக்ஸ்’ நடத்திய ரேடியோகார்பன் டேட்டிங் முறை ஆய்வில், இது கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, இது கங்கைச் சமவெளிகளின் நகரமயமாக்கலுக்குச் சமகாலத்தியதாக அளிக்கப்படுகிறது.
நகரமயமாக்கலுக்கு இது சான்றாகும்!
2017–2018 அகழ்வாராய்ச்சிப் பருவத்தி லிருந்து தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறையால் தேதியிடப்பட்ட 29 ரேடியோ கார்பன் ஆய்வு மாதிரிகளில், முதன்மையானது கி.மு. 580 ஆம் ஆண்டிலிருந்தும், பிந்தையது கி.பி. 200 ஆம் ஆண்டு வரை என்பது தெரிய வருகிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் 800 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த மக்களால் செழித்து வளர்ந்த நகர்ப்புற மற்றும் தொழில்துறை குடி யேற்றத்தை இக் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கு காணப்படும் சங்க காலத்தின் பெரிய செங்கல் கட்டமைப்புகள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள நகர மயமாக்கலுக்குச் சான்றாகும்.
‘‘செங்கல் கட்டமைப்புகளுக்கு மேலே உள்ள பெரும்பாலான சான்றாதாரங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தையவை, அதே நேரத்தில் கீழே உள்ளவை கிமு 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ளன” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்.ராஜன் கூறுகிறார். “இது இந்தியாவின் இரண்டாவது நகர மயமாக்கலான கங்கைச் சமவெளிகளின் நகர மயமாக்கலுடன் கீழடியை இணைக்கிறது. 29 ரேடியோகார்பன் தேதிகளில், 12 மாதிரிகள் அசோகனுக்கு முந்தைய காலத்தில், கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவை.”
கொந்தகை புதைகுழியில் தோண்டி யெடுக்கப்பட்ட ஒரு மண்டை ஓட்டிலி ருந்து 3D தொழில்நுட்பம் மற்றும் மானுட வியல் அளவீடுகளைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கீழடி குடியிருப்பில் வாழ்ந்த பண்டைய தமிழரின் பழக்க வழக்கங்கள் வெளிப்படுத்துவதை நோக்கி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நெருங்கி வருவதாகவும் தெரிகிறது.
உண்மையான முகத்தை
நாங்கள் மறுகட்டமைப்போம்!
“மண்டை ஓட்டின் அடிப்படையில், அங்கு வாழ்ந்த நபரின் வயது, உணவு முறை, பாலினம் மற்றும் உண்மையான முகத்தை நாங்கள் மறுகட்டமைப்போம்” என்கிறார் தொல் பொருள் ஆய்வாளர் ஆர்.ராஜன். கி.மு.580 இல் கீழடியில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சான்றுகளை மறுகட்டமைக்க, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து 20–க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் மாநில தொல்பொருள் துறை இணைந்து செயல்படுகிறது, இதில் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள பீசா பல்கலைக்கழகம், சிகாகோவில் உள்ள ஃபீல்ட் மியூசியம், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம், அய்அய்டி காந்திநகர் மற்றும் டெக்கான் கல்லூரி ஆகியவையும் அடங்கும்.
பண்டைய மக்களின் இடப்பெயர்வு – மக்கட் செறிவைப் புரிந்து கொள்ள உதவும்!
கீழடியில் காணப்பட்ட விலங்கு எலும்புகளை டெக்கான் கல்லூரி ஆய்வு செய்து வருகிறது. அகழ்வாராய்ச்சியில் காளைகள், எருமைகள், ஆடுகள், பசுக்கள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மான் மற்றும் புள்ளிமான்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மனித டி.என்.ஏ. மற்றும் விலங்கு டி.என்.ஏ.வை பகுப்பாய்வு செய்வதில் ஈடுபட்டுள்ளனர், இது கீழடி மற்றும் கொந்தகையின் தொகுக்கப்பட்ட கிராமமான கீழடியின் பண்டைய மக்களின் இடப்பெயர்வு மற்றும் மக்கட் செறிவைப் புரிந்துகொள்ள உதவும்.
இந்த அறிவியல் அணுகுமுறை ஒரே இடத்திலிருந்து 29 ரேடியோ கார்பன் தேதி களை கீழடி தொல் பொருள் ஆய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
கீழடியில் தோண்டியெடுக்கப்பட்ட தமிழ்–பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள், எழுத்து வடிவத்தின் தோற்றத்தை கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளியுள்ளன. தங்கம் மற்றும் தந்தக் கலைப்பொருட்கள் பண்டைய தமிழர்கள் ஆடம்பர வாழ்க்கையை நடத்தினர் என்பதைக் குறிக்கின்றன.
“கீழடி என்பது எழுத்தறிவு பெற்ற சமூகத்தை யும் கைவினைஞர்களின் சமூகத்தையும் கொண்ட ஒரு நகர்ப்புறக் குடியிருப்பு என்பதை இது காட்டுகிறது,” என்கிறார் மாநில தொல்பொருள் துறையின் இணை இயக்குநர் ஆர். சிவானந்தம். “இது கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தை மதுரை வழியாக மேற்குக் கடற்கரையில் உள்ள முசிரிஸுடன் (முசிறி) இணைக்கும் ஒரு பண்டைய வர்த்தகப் பாதையில் ஒரு தொழில்துறை மய்யமாக இருந்தது.” இருப்பி னும், இக்குடியேற்றத்தின் அசல் பெயர் தெரியவில்லை.
சங்க இலக்கியம் கற்பனை கதைகளல்ல!
சங்க இலக்கியம் வெளிநாட்டு வர்த்தகம், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள், நகரங்கள் மற்றும் தெருக்கள் மற்றும் அரண்மனைக் கட்டடங்கள் பற்றிப் பேசுகிறது. “சங்க இலக்கி யம் கற்பனைக் கதைகள் அல்ல, பண்டைய தமிழர்களின் வாழ்ந்த அனுபவம் என்பதை கீழடி அகழாய்வு நிரூபித்துள்ளது” என்று இந்திய தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தில் செவ்வக மற்றும் கன வடிவங்களில் டெரகோட்டா மற்றும் தந்த;g பகடைகளையும் கண்டுபிடித்தனர், இது சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகுப்புகளில் ஆறாவது ‘கலித்தொகை’ யில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
“கிமு 6 ஆம் நூற்றாண்டின் நகர நாகரிகத்தின் வேர்களைக் கொண்ட ஒரே இடம் கீழடி மட்டும் அல்ல. கொடுமணல், பொருநை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகியவையும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவை என ரேடியோ கார்பன் தேதி மாதிரிகள் மூலம் அறியப்படு கிறது” என்கிறார் ராஜன். “கி.மு. 785 ஆம் ஆண்டிலேயே ‘கொற்கை நாகரிகம்’ இருந்ததுஅகழாய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு தேதி உருவாக்கியுள்ளது, இது சங்க கால நகரமய மாக்கல் பரவலாக இருந்ததைக் குறிக்கிறது.”
கீழடியில் 10 பருவகால அகழ்வாராய்ச்சிகள் நடந்த போதிலும், ஆராய்ச்சியாளர்கள் கீழடியில் உள்ள 110 ஏக்கர் நிலப்பரப்பில் 4 விழுக்காடு மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். மாநில அரசு அகழ்வாராய்ச்சிகளைத் தொடர திட்டமிட்டுள்ளது மட்டுமின்றி கண்டுபிடிப்புகளைக் காட்சிப்ப்படுத்த ஒரு அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளது, இந்தியாவில் இதுபோன்ற முதல் அருங்காட்சி யகமான இது செயல்பாட்டில் உள்ளது. “தமிழ்நாட்டில் தொல்பொருள் புரிதலை மாற்றிய முதல் தளம் கீழடி” என்கிறார் ஆர். ராஜன்.
இவ்வாறு இக்கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.