உலகக் குருதி கொடையாளர் நாள் ஜூன் 14

1 Min Read

அரசுக்கு வேண்டுகோள்

நாள்தோறும் நடை பெறும் வாகன விபத் துகள், பிரசவ காலங்களில் பெண்களுக்கு, இதய மாற்று சிகிச்சை, புற்றுநோய், புதிய வகை நோய்கள் என குருதியின் தேவை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் 2 விநாடிகளுக்கு ஏதே னும் ஒருவருக்கு குருதி அவசியமாக தேவைபடுகிறது. நமது நாட்டிற்கு தேவை 400 லட்சம் யூனிட் குருதி. ஆனால் நமது கிடைப்பதோ 40லட்சம் யூனிட் மட்டுமே. பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு குருதிக் கொடையின் விழிப்புணர்வு அதிகளவில் தேவைபடுகிறது.

பள்ளிப் பாடப் புத்தகங்களில் குருதிக் கொடையின் அவசியத்தை விளக்கும் மருத்துவர்களின் கட்டுரைகள் கண்டிப்பாக இடம் பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும். மக்கள் அதிகம் கூடும் ரயில்,  பேருந்து நிலையங்கள், பூங்கா மற்றும் மைதானங்களில் குருதிக் கொடையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாகை களை நிறுவ அரசு மற்றும் பொதுமக்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

– இரா.எத்திராஜன்

தொடர்ந்து 30 வருட தன்னார்வ (voluntary)
குருதிக் கொடையாளர்

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *