அரசுக்கு வேண்டுகோள்
நாள்தோறும் நடை பெறும் வாகன விபத் துகள், பிரசவ காலங்களில் பெண்களுக்கு, இதய மாற்று சிகிச்சை, புற்றுநோய், புதிய வகை நோய்கள் என குருதியின் தேவை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் 2 விநாடிகளுக்கு ஏதே னும் ஒருவருக்கு குருதி அவசியமாக தேவைபடுகிறது. நமது நாட்டிற்கு தேவை 400 லட்சம் யூனிட் குருதி. ஆனால் நமது கிடைப்பதோ 40லட்சம் யூனிட் மட்டுமே. பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு குருதிக் கொடையின் விழிப்புணர்வு அதிகளவில் தேவைபடுகிறது.
பள்ளிப் பாடப் புத்தகங்களில் குருதிக் கொடையின் அவசியத்தை விளக்கும் மருத்துவர்களின் கட்டுரைகள் கண்டிப்பாக இடம் பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும். மக்கள் அதிகம் கூடும் ரயில், பேருந்து நிலையங்கள், பூங்கா மற்றும் மைதானங்களில் குருதிக் கொடையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாகை களை நிறுவ அரசு மற்றும் பொதுமக்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
– இரா.எத்திராஜன்
தொடர்ந்து 30 வருட தன்னார்வ (voluntary)
குருதிக் கொடையாளர்