‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
‘‘பெரியார் உலகம்” சிறுகனூரில் அமையவுள்ளது. அதுபற்றி ‘விடுதலை’ நாளேட்டினைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அறிந்துள்ளேன்.
பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் ஆசிரியர் அய்யா, அன்பு அண்ணன் ஆகிய இருவரும் ‘பெரியார் உலகம்’ அமைய இருப்பதைப் பற்றிப் பேசியதைக் கேட்டுள்ளேன்.
ஆசிரியர் அவர்கள் ‘பெரியார் உலக நிதி’ வழங்கிடுமாறு விடுத்த வேண்டுகோள் அறிக்கையை ‘விடுதலை’ ஏட்டில் பார்த்த பிறகு, கோ. அரங்கசாமி – ராஜம் குடும்பத்தினர் சார்பாக ரூ.4,00,000 (ரூ.நான்கு லட்சம்) நன்கொடையை ஆசிரியரிடம் பாலி அக்காவும் (மருத்துவர் ச. மீனாம்பாள்), நாங்களும் இணைந்து வழங்கியது பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.
– வேல்விழி ராமச்சந்திரன்