பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தரப்படும் நீலமலை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
1 Min Read

நீலமலை, ஜூன் 14- நீலமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் 8.6.2025 அன்று மாலை 6 மணியளவில் மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் இரா.கவுதமன் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவதென தீர்மானிக்கப்பட்டது.
இயக்கப் பிரச்சாரத்தை தீவிரமாக்குவதென தீர்மானிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நீலமலை மாவட்ட பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.எம்.ராஜ் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நீலமலை மாவட்ட கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்து உதகை மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்த திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *