குற்றாலம் வீகேயென் மாளிகையில் 46ஆவது ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஜூலை 10,11,12,13 – வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் பெரியாரியல் வகுப்பு எடுக்க உள்ளார்கள் பயிற்சிப் பட்டறை நடைபெறும் வீகேயென் மாளிகையை தென்காசி மாவட்ட தலைவர் வீரன், மாவட்ட செயலாளர் வை.சண்முகத்தோடு பார்வையிட்டு ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டது.