ஆம்பூர், ஜூலை 14- ஒருங் கிணைந்த வட ஆற்காடு மாவட்ட மேனாள் தலைவர் ஆம்பூர் (சான்றோர் குப்பம்)
ஏ.பெருமாள் அவர்களின் மகள் ஆசிரியர் பெ.புரட்சி (வயது 77) அவர்கள் 11.06.2025 அன்று இயற்கை எய்தினார்.அம்மையாரின் இறுதி நிகழ்வு அவரது இல்லம் ஆம்பூர் சான்றோர்குப்பத்தில் 12.06.2025 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
அம்மையார் அவர்கள் தான் வாழும் காலத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் பயணித்து தன்னுடன் வாழ்ந்த மக்களிடையே மூட நம்பிக்கைகள் ஒழிய பெரும் காரணமாக இருந்தவர்.
அம்மையாரின் இறுதி நிகழ்வில் கே. சி. எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர், ப.க.),
வி. இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர் வேலூர்), வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்), ரவி, பன்னீர், ச.ஈஸ்வரி (மகளிரணி), ஏ. டி. ஜி.சித்தார்தன், மு. வெற்றி, வெங்கடேசன், பெ.ரா.கனகராஜ், சி.எ.சிற்றரசன், ஆர். இராஜேந்திரன், க. முருகன் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
அம்மையாரின் கண்கள் கொடையாக வழங்கப்பட்டன. இறுதி நிகழ்விற்கு பின்னர் மருத்து வமனைக்கு உடற் கொடையாக வழங்கப்பட்டது.