மலேசியாவில் டிக்டாக் ஒரு பிரபலமான சமூக ஊடக தளமாக வளர்ந்து வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், டிக்டாக் ஷாப் (TikTok Shop) மூலம் பொருட்களை வாங்குவதும் விற்பதும் பெருகி வருகிறது.
தற்போது, இந்த இணைய வழி (ஆன்லைன்) வர்த்தகத்தில் காற்று விற்பனைக்கு வந்துள்ளது. அதுவும் கடற்கரைக் காற்றாம்.
பொதுவாக இந்தியாவில் பல்வேறு இணையவழி விற்பனையில் அவர்கள் வாங்கிய பொருளுக்குப் பதிலாக கற்கள், தலைமுடிகள், குப்பைகள், அல்லது பிளாஸ்டிக்கிலான சாமி சிலைகளை அனுப்பிவைத்து ஏமாற்றுவார்கள். அதே போல் தான் மலேசியாவில் கடற்கரைக் காற்றும் விற்பனைக்கு வந்துள்ளதாம்.
பாலித்தீன் பையில்…
“இந்திய ரூபாய் மதிப்பில் 500 ரூபாய் மதிப்புள்ள குளிர்ந்த கடற்கரை காற்று கிடைக்கும்” என்ற விளம்பரத்தை அடுத்து அது என்ன? என்று ஆர்வத்தில் ஆர்டர் செய்யும் இளைஞர்களுக்கு பலூன் போன்ற பாலித்தீன் பை ஒன்று பார்சல் வருகிறது. அதை கவனமாக பிரிக்கவும் உள்ளே கடற்கரைக் காற்று உள்ளது என்று மலாய் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
திறந்தால் ஒன்றுமே இல்லை காரணம் உள்ளே இருக்கும் காற்று வெளியே சென்றுவிடும். அவ்வளவுதான் இது மோசடி என்றாலும் மக்கள் இதன் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
மோசடி
இதற்கான மலேசிய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு “காற்று விற்பனை” போன்ற மோசடிகள் குறித்து நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், இணையதள வர்த்தக சேவையை பயன்படுத்துங்கள் என்று தற்போது இளைஞர்களை எச்சரித்து வருகின்றனர்.