போபால் பவுடியா கலான் மேம்பாலம் உலக அதிசயங்களில் ஒன்று, பைக் அல்லது காரில் பயணம் செய்பவர்கள் வானத்தில் சிறிது தூரம் பறக்கும் அனுபவத்தை இந்த மேம்பாலம் தரும்! அதுவே அவர்களின் கடைசி நிமிட பயணமாக அமையலாம்!!
பயணிகளின் உயிரோடு விளையாடும் போபாலின் 90 டிகிரி ‘அதிநவீன’ மேம்பாலம்: ஒரு பொறியியல் ‘அதிசயம்’ ஆகும்
போபால் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதன் தனித்துவமான 90 டிகிரி திருப்பம், பொறியியல் வல்லுநர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை ‘பொறியியல் அற்புதம்’ என்று நையாண்டி செய்கின்றனர்
இதில் என்ன சிறப்பு என்றால்…
90 டிகிரி வளைவு: மேம்பாலத்தின் மய்யப் பகுதியில் திடீரென வரும் இந்த 90 டிகிரி வளைவு, வாகன ஓட்டிகளுக்கு ஒரு திகில் அனுபவத்தை வழங்கும் . ‘ரேஸ்’ படங்களில் வருவது போல, ஒரு திருப்பத்தில் நீங்கள் சாகசமாக வளைக்கலாம்,
பறந்து செல்லும் வாய்ப்பு
இந்த வளைவில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், புவியீர்ப்பு விசைக்கு சவால் விடுத்து, ‘பறந்து’ செல்லும் வாய்ப்புகள் அதிகம். இது கண்டிப்பாக சாகசப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
திடீர் வளைவுவில் ஏற்படும் அடிக்கடி ஏற்படப்போகும் விபத்துகளால் போபால் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக வேகமாக வரும் ஆம்புலன்ஸ்கள் நேரடியாக பறந்து சென்று மருத்துவமனையில் லேண்ட் ஆகும் வாய்ப்பு அதிகம். ஓட்டுநரும் உதவியாளரும் நோயாளியும் உயிரோடு இருந்தால் அது உலக அதிசயம்.
சமூக ஊடக ‘வைரல்’: இந்த பாலம், தற்போது உலக அளவில் ஒரு விவாதப் பொருளாக மாறிவிட்டது. இதன் மூலம், போபால் நகரத்திற்கு ஒரு பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘
2001 முதல் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது அங்கு வியாபம் என்ற மாநில அரசு தேர்வாணையத்தின் மூலம் பொறியியல் மருத்துவம் மற்றும் அரசுப் பணிகளுக்கு சேர பெரும் ஊழல் நடந்துள்ளது. இன்றளவும் அதற்கான விசாரணை நடந்துகொண்டே (நீண்ட பாலம் போல்…) இருக்கிறது.
இந்த நிலையில் அந்த வியாபம் ஊழல் மூலம் பதவிக்கு வந்த யாரோ ஒரு பொறியியலாளர் தான் இந்த பால வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
போபாலின் பவாடியா கலன் மேம்பாலத்தில் உள்ள 90 டிகிரி வளைவு, இடப்பற்றாக்குறை மற்றும் செலவுகளைக் குறைக்கும் வகையில் சிக்கனமாக கட்டப்பட்டுள்ளதாம்!?
ரயில்வே மேம்பால நடைமேடை என்று கூறப்பட்ட நிலையில் சாலை நெரிசலைத் தவிர்க்க இந்தப்பாலம் கட்டப்பட்டது என்கிறது போபால் நகர நிர்வாகம்!?