ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள்தான் குதூகலத்தின் ஊற்றுகள். வளரவேண்டிய குடும்பங்களின் நாற்றுகள் இவர்கள் நமக்கு மகிழ்ச்சியையும், பல்வேறு துயரங்கள், கவலைகளைப் பறந்தோடச் செய்யும் பயன்தரும் மருந்துகளாகவும் கூட பற்பல நேரங்களில் அமைகிறார்கள்.
அவர்களிடம் நாம் காட்டும் பாசம், அவர்களை மகிழ்விக்கச் செய்யும், அதே நேரத்தில், நம்மையும் மன நிறைவுக்கு அழைத்துச் செல்கின்றன அல்லவா? அவர்களைத் தொட்டு அன்பு பாச மழை பொழியுங்கள்.
– கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ 2ஆம் பாகம் நூல், பக்கம்: 56
(கருப்புச்சட்டை மா.சீ.பாலன், திருப்பத்தூர்)