அறிய வேண்டிய அம்பேத்கர்

viduthalai
2 Min Read

மகாத்மாவுக்கு ஓர் எதிர்வினை
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

  1. விளம்பரம் தேடுவது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு (-ப.ஆ.)

நான் ஜாத்-பாத்-தோடக் மண்டலுக்காக சாதியைப் பற்றித் தயாரித்திருந்த உரையைப் பற்றி தமது ஹரிஜன் இதழில் குறிப்பிட்டுள்ளார் மகாத்மா. அதன் வாயிலாக அவர் என்னைச் சிறப்பித்ததைப் பெரிதும் மதிக்கிறேன். என் உரையைப் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துகளைப் படித்தபோது, என் கருத்துகளிலிருந்து அவர் முற்றிலும் முரண்படுகின்றார் என உணர்ந்தேன். பொதுவாக நான் என்னை எதிர்ப்பவர்களோடு வாதத்திற்குப் போவதில்லை. குறிப்பிடத்தக்க சிறப்புக் காரணங்கள் இருந்தால் மட்டுமே விவாதிப்பது உண்டு. என்னை எதிர்ப்பவர் யாரோ வெளி உலகிற்கு அறிமுகம் ஆகாத பொதுவானவராக இருந்திருந்தால் இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் மகாத்மாவே என்னை எதிர்ப்பவராக இருப்பதால், அவர் எடுத்துரைத்துள்ள வழக்கை மறுப்பதற்கு முயன்றாக வேண்டும் என்று கருதுகின்றேன்.

அவர் எனக்கு அளித்துள்ள சிறப்பை மதிக்கும் அதே நேரத்தில் அவர் எழுதியுள்ளதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் குறிப்பிட்டாக வேண்டும். விளம்பரம் தேடும் ஆசை எனக்கு இருப்பதாகவும்,என்னை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே, மாநாட்டில் படிக்காத என்னுடைய உரையை, நான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பதே என் அதிர்ச்சிக்குக் காரணம். மகாத்மா என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்; இந்துக்கள் தங்களுடைய தற்போதைய நிலையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டிவிட வேண்டும் என்பதுதான் அந்த உரையை நான் வெளியிட்டதன் நோக்கமாகும். நாள் ஒருபோதும் விளம்பரத்திற்காக ஏங்குபவன் அல்ல; சொல்லப்போனால் நான் விரும்பும் அளவுக்கு மேலாக, தேவையான அளவுக்கு மேலாகவே அது எனக்குக் கிடைத்துள்ளது. ஒருவேளை விளம்பரம் தேடும் நோக்கத்தோடு அந்த உரையை நான் வெளியிட்டேன் என்றே வைத்துக்கொண்டாலும், அதற்காக என்மீது யார் கல்லெறிய முடியும்? கண்ணாடி வீட்டுக்குள் வாழும் மகாத்மா போன்றவர்கள் இதனைச் செய்ய முடியாது என்பதில் அய்யமில்லை.

  1. என் உரையின் மய்யக் கருத்துகள் [-ப.ஆ.]

உள்நோக்கம் என்பது இருக்கட்டும். என் உரையில் நான் எழுப்பியுள்ள கேள்விக்கு மகாத்மா என்ன விடை அளித்துள்ளார்? எனது உரையைப் படிக்கும் யாரும் நான் எழுப்பி

Share This Article