தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூன் 13- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

மதிப்பூதியம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை தகுதியான நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.

அந்த வகையில், பள்ளி மேலாண் மைக் குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, 2024-2025ஆம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கடந்த மார்ச் வரை மதிப்பூதியம் பெறும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல், 2025-26-ம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் வகையில் ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடுமாறு பல்வேறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. இதையடுத்து, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை (மே தவிர்த்து) 3 மாதங்கள் தற்காலிகமாக நியமிக் கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவ தற்காக ரூ.27.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது மாவட் டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மதிப்பூதிய தொகையை, தொடர் புடைய மாவட்டக் கல்வி அலுவலர் கள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலு வலர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *