வடபழனியில் ரூ.481 கோடியில் 12 அடுக்கு தளங்களுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன்.13- உலகத்தரம் வாய்ந்த பல் நோக்கு வசதிகளுடன், 12 அடுக்கு தளங் களுடன் வடபழனியில் ரூ.481 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள்

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. 2-ஆம் கட்ட திட்டம் 118.9 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாதவரம்-சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் -பூந்த மல்லி, மாதவரம் – சோழிங்க நல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஏற்ெகனவே, பிராட்வேயில் உள்ள  நிலையத்தை ஒருங்கி ணைந்த போக்குவரத்து   முனை யமாக மாற்றும் முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இணைந்து செயல்படுகிறது.

வடபழனி பேருந்து நிலையம்

சென்னையில் மிகவும் பர பரப்பான பேருந்து நிலையங்களில் ஒன்றாக வடபழனி பேருந்து நிலையம் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 158 பேருந்து கள் வந்து செல்கிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள்.எனவே, வடபழனி பேருந்து பணிமனையை ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக மாற்றும் முயற்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இறங்கியுள்ளது.

இதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் ரூ.481.3 கோடியில் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த திட்டம் ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் உள்ள வட பழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்பட இருக் கிறது.

பேருந்து முனையம்

வடபழனியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், பல்நோக்கு போக்குவரத்து மய்யம் அமைக்கப்படுகிறது. அங்கு, தரை தளத்தில் நவீன பேருந்து நிலையம், உள்நுழைவு வாயில், வெளியே செல்லும் வாயில்கள் அமைக்கப்படும். இதேபோல, 1,475 இருசக்கர வாகனங்கள், 214 கார்களை நிறுத்திக்கொள்ளும் வகையில் வாகன வசதி ஏற்படுத் தப்பட உள்ளது.

மொத்தம் 12 மாடிகள் கொண்ட வணிக வளாகமாகவும் இது கட்டப்படுகிறது. முதல் தளத்தில் இருந்து 10-ஆவது தளம் வரை அலுவலக இடங்களும், வரவேற்பு அறைகள், ஓய்வறைகள், அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளது.

11 மற்றும் 12-ஆவது தளத்தில் அனிமேசன், கிராபிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள் ளது. பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்களுக்கு  விருப்பமான உணவு வகைகள் கிடைக்க ஏது வாக 5-ஆவது மாடியில் உணவு மய்யம் மற்றும் உணவகம் அமைய உள்ளது. இதுபோக, சில்லறை விற்பனை நிலையங்கள் தரை தளத்தில் அமைந்திருக்கும்.

மாடியில் பசுமைத் தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகள் அமைக்கப்பட இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு வசதிகள் கொண்ட இடமாக வட பழனி பேருந்து பணிமனை மாற்றப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *