தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவராக திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்

1 Min Read

தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 13 தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவ ராக திப்பம்பட்டி ஆறுச்சாமி மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் தலை வராக கா.கனிமொழியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா நேற்று முன்தினம் (11.6.2025)  வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூய்மைப்பணியாளர் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் கீழ் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினர்களாக சேர்க் கப்பட்டு, அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கென மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், இறுதி நிகழ்வுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில், ஆய்வு கூட் டங்கள் அவ்வப்போது நடத் தப்பட்டு, வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட் டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 2 நல வாரியங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை சீரான இடைவெளி களில் ஆய்வு செய்து, திட்டங்களானது நல வாரிய உறுப் பினர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்திடவும், திட்டங்கள் குறித்து அவ்வப்போது கள ஆய்வு செய்திட ஏதுவாகவும், தற்போது தூய்மைப் பணியாளர் நல வாரியத்திற்கு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமியை தலைவராகவும் மற்றும் பழங்குடியினர் நல வாரி யத்திற்கு கா.கனிமொழியை தலை வராகவும், நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைவர் களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *