திராவிடர் கழகம் நடத்தும் 46-ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – குற்றாலம்

1 Min Read

பேரன்புடையீர் வணக்கம்

திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜூலை 10,11,12,13 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலம் V.K.N. மாளிகையில் 46- ஆம் ஆண்டாக மிக சிறப்புடன் நடைபெறவுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.

15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.

நன்றி

«  நுழைவுக்கட்டணம் மாணவர்களுக்கு ரூ.200/-

«    பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.1000/-

«    மாணவர்கள், பார்வையாளர்கள் பெட்சீட் (போர்வை) கொண்டு வர வேண்டும்

«    15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை

«    முன்பதிவு செய்வது கட்டாயம்

«    100 நபர்களுக்கு மட்டும் அனுமதி

«    கருப்புச்சட்டையுடன் பங்கேற்பது கட்டாயம்

«    பயிற்சிப் பட்டறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்

முன்பதிவு செய்ய

இவண்

இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்

திராவிடர் கழகம்

செல்பேசி: 9842598743

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *