நியூயார்க், ஜூன் 12- அமெரிக்க விமான நிலையத்தில், நாடு கடத்த அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர், கையில் விலங்கிட்டு குற்ற வாளி போல் நடத்தப்பட்டார்.
கதறி அழுத இந்திய மாணவர்
அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில், இந்திய மாண வர் ஒருவர் கையில் விலங்கிடப் பட்டு, நாடு கடத்தப்படு வதற்காக அழைத்து வரப்பட்டார். அவரை 3 காவல் அதிகாரிகள் தரை யுடன் அழுத்தினர். அம்மாணவர் அழுதபடி காணப்பட்டார். அமெரிக்க வாழ் இந்தியரும், சமூக ஆர்வலருமான குணால் ஜெயின் என்பவர் இந்த காட்சியை காட்சிப்பதிவு எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
காட்சிப்பதிவு ‘வைரல்’ ஆனது
இது குறித்து குணால் ஜெயின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், இந்திய தூதரகத்தையும் இணைத் துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய மாணவர் ஒருவர் நெவார்க் விமான நிலையத்தில் நாடு கடத்த அழைத்துவரப்படுவதை பார்த்தேன். கையில் விலங்கிடப் பட்ட நிலையில், அவர் குற்றவாளி போல் நடத்தப்பட்டார்.
இது ஒரு மனித துயரம்
ஒரு வெளிநாட்டுவாழ் இந்திய ராக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் இதயம் நொறுங் கியது. இது ஒரு மனித துயரம்.
நான் ஏறிய விமானத்தில் தான் அவர் வருவதாக இருந் தது. ஆனால் வரவில்லை. அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அவருடைய பெற்றோருக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை. பெற்றோருடன் அவர் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
பைத்தியம் அல்ல
அவர் எவ்வளவோ கனவுகளு டன் வந்திருப்பார். எந்த தீங்கும் செய்யவில்லை. அவர் அரியானி மொழியில் பேசினார். “நான் பைத் தியம் அல்ல, ஆனால் பைத்தியம் என்று நிரூபிக்க இவர்கள் முயற் சிக்கிறார்கள்” என்று அவர் கூச்சலிட்டார்.
இவரைப்போன்ற இளம் வயதி னர் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். ஆனால், ஏதோ காரணத்தால், தாங்கள் வந்த நோக்கத்தை குடியேற்ற அதிகாரிகளிடம் விளக்க முடிவதில்லை. அதனால் நாள்தோறும் 3 அல்லது 4 பேர் இது போல் நாடு கடத்தப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவை நூற்றுக்கணக் கானோர் மறுபதிவு செய்துள்ளனர். கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இந்திய தூதரகம் பதில்
இதற்கு நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணைதூதரகம் பதில் அளித்துள்ளது. அதில் “நெவார்க் விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் சிரமங்களை சந்தித் தது பற்றி சமூக வலைத்தளம் மூலம் அறிந்தோம். இதுபற்றி உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளோம். இந்தியர்கள் நலன்களை பாதுகாக்க தூதரகம் உறுதி பூண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் தலையிட வேண்டும்
குணால் கோஷின் காட்சிப் பதிவை காங்கிரஸ் தலைவர்களும் பகிர்ந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் கவுரவத்தையும், இந்தியர்களின் கவுரவத்தையும் பாதுகாப்பது இந்திய பிரதமரின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்று. எனவே, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச வேண்டும். இந்தியர்களுக்கு எதிரான அராஜகங்கள் விஷயத்தில் அவர் தலையிடுமாறு கேட்கவேண்டும். இவ்வாறு அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.