தனக்கு இறைச்சி உணவை வழங்கி தன்னுடைய மத உணர்வைப் புண்படுத்தி விட்டார்கள் என்று கூறிய நபரின் புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இறைச்சி சமைக்கிறார்கள் என்று தெரிந்தும் அங்கே உணவுக்குப் பதிவு செய்தது உங்கள் தவறல்லவா? என்று புகார் கூறியவர் மீது கேள்வி எழுப்பியுள்ளது
மும்பையைச் சேர்ந்த இருவர், 2020 டிசம் பரில், அங்குள்ள இறைச்சிக்குப் பெயர் போன உணவகத்தில், இறைச்சி அல்லாத உணவை அனுப்பக் கோரினர்.
அவர்களுக்குத் தவறுதலாக கோழி இறைச்சி உணவு வழங்கப்பட்டது.
ஊழியர்கள் தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டு வேறு உணவு தருகிறோம் என்று பல முறை வலியுறுத்தியும் ஏற்றுக்கொள்ளாமல், கடையின் அலட்சியத்தால் மன உளைச்சல் ஏற்பட்டதோடு, மத உணர்வுகள் புண்பட்டதாகக் கூறிய அவர்கள், 6 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, மும்பை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை மறுத்த உணவக நிர்வாகம், தங்களுக்கு என்று தனிப்பட்ட உணவைக் கோரவில்லை. பொதுவாகப் பதிவு செய்துவிட்டு விளக்கம் கேட்ட உணவக ஊழியர்களைத் தாக்கிப் பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் 3 லட்சம் ரூபாய் கேட்ட தாகவும் உணவக நிர்வாகம் குறிப்பிட்டது.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த மும்பை நுகர்வோர் குறைதீர் ஆணையர் பிறப்பித்த உத்தரவு:
‘‘இறைச்சி மற்றும் இறைச்சி அல்லாத உணவை உட்கொள்வதற்கு முன், அதை வேறுபடுத்திப் பார்க்க முடியும். இறைச்சி உணவு, புகார்தாரர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர். இரண்டுவகை உணவுகள் வழங்கும் உணவகத்தில் இருந்து, ஏன் அவர்கள் உணவுக்குப் பதிவு செய்ய வேண்டும்?
இறைச்சி அல்லாத உணவுக்கென உள்ள உணவகத்தில், அவர்கள் ‘ஆர்டர்’ செய் திருக்கலாமே! இந்த விவகாரத்தில், உணவகத்தின் சேவையில் எந்த குறைபாட்டையும் புகார்தாரர்கள் நிரூபிக்கவில்லை. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’. இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
வட மாநிலங்களில் எந்த மாதிரியான உணர்வை இந்த இந்துத்துவாவாதிகள் உருவாக்கி வைத்துள்ளனர் பார்த்தீர்களா?
எதில்தான் மத உணர்வு என்பதற்கு எல்லையே கிடையாதா? இறைச்சி உணவு சமைக்கும் உணவகம் என்று தெரிந்திருந்தும் அந்தக் கடை யில் மரக்கறி உணவு வாங்க விரும்புவது ஏன்?
அப்படி மாறியே உணவை அனுப்பினாலும் அதனைத் திருப்பிக் கொடுத்து விட்டு மரக்கறி உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே! இதில் மத உணர்வைப் புண்படுத்தும் பிரச்சினை எங்கிருந்து வந்தது?
எதையாவது சொல்லிப் பணம் பறிக்கும் ஒரு கும்பல் வட மாநிலங்களில் கிளம்பி இருப்பதைத் தான் இது வெளிப்படுத்துகிறது.
மும்பை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் செவியில் அறைந்ததுபோல பதிலடி கொடுத் திருப்பது வரவேற்கத்தக்கது.
உலகத்தில் எந்த நாட்டிலாவது உணவு விட யத்தில் மதத்தின் மூக்கை நுழைய விடுவார்களா?
இறைச்சி உணவு உண்பதில்கூட பசு மாட்டுக் கறி, எருமை மாட்டுக் கறி என்ற ‘குஸ்தி’ இங்கே?
பசு என்றால் கோமாதாவாம். அதனை வெட்டிக் கறி சமைக்கக் கூடாதாம்! பிஜேபி ஆளும் மாநிலங் களில் இதற்காக சட்டமே போட்டு இருக்கிறார்கள்.
மனிதர்களில்தான் ஜாதிப் பாகுபாடு என்றால் மாடுகளில்கூட பசு என்றால் மாதா, எருமை என்றால் சாதாவா?
பசு வெள்ளையாக இருப்பதும், எருமை கறுப்பாக இருப்பதும்தான் இதற்குக் காரணமா?