உலகில் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த பூமியின் சாரசரி வெப்பநிலையை விட, 2 டிகிரி செல்சியஸ்அதிகரித்தால் 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையின் ஹிந்துகுஷ் பகுதி பனிமலையில் 75 சதவீதம் உருகும் என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாடுகளில் 200 கோடி பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். அதே நேரத்தில் உலக சராசரி வெப்பநிலையை ‘பாரிஸ்’ ஒப்பந்தப்படி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் கட்டுப்படுத்தினால், ஹிந்துகுஷ் பனிமலையில் 40 – 45 சதவீதம் மட்டுமே உருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.