மூடத்தனத்திற்கு அளவே இல்லையா? ‘பேய்’ தன்னை அழைப்பதாகக் கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை!

1 Min Read

நாகர்கோவில், ஜூன் 12- குமரி மாவட்டம் குருந்தன்கோடு காடேற்றி பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் இசக்கி முத்துகுமார் (33), வெல்டிங் தொழிலாளி. திருமணமாகாத அவர் கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (10.6.2025) காலையில் வீட்டில் இசக்கி முத்துகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து வந்த இரணியல் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி  உடற்கூராய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கடிதம்

இதைத் தொடர்ந்து வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கி முத்துகுமார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும், ஆகவே அதனுடன் செல்கிறேன்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்துகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும்,  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *