கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

1 Min Read

* குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஒத்துழையுங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

* விவசாயிகளின் தேவைகளை அறிந்து திராவிட மாடல் அரசு உதவுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைப்பு, விடுதி மேம்பாடு குறித்து பிரதமருக்கு ராகுல் கடிதம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பட்டியல் ஜாதி இட ஒதுக்கீட்டில் துணை வகைப்பாடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ‘மிகவும் ஓரம் கட்டப்பட்டவர்களுக்கு நியாயமான பங்கு கிடைப்பதை’ உறுதி செய்தது: ஆக்ஸ்போர்டு யூனியனில் ஆற்றிய உரையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு.

*பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு: 2029 மக்களவைத் தேர்தலில் பெண்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி என தகவல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் 33 தவறுகள்: ”இத்தனை பொய் கூறும், இவ்வளவு தவறுகளை செய்யும், மக்களை சிக்க வைக்கும், இளைஞர்களை ஏமாற்றும், ஏழைகளை சிக்க வைத்து வாக்குகளை பெறும் ஒரு பிரதமரை நான் பார்த்தது கிடையாது”. காங். தலைவர் கார்கே விமர்சனம்.

தி இந்து:

* கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கொல்ல முயற்சிக்கிறது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம். முதன்மை கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS) செயல்படுத்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக, 2025-2026 நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசு அதன் வருடாந்திர ஒதுக்கீட்டில் 60 சதவீதம் ஆக குறைத்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மனுஸ்மிருதி மாணவர்களுக்கு வழிகாட்டியாம்! டில்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜாதி மற்றும் திருமணம் சமூகத்தை எவ்வாறு நாகரிகப்படுத்துகிறது, ஒழுக்கங்கள் நடத்தையை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பது குறித்த பாடநெறியை மனுஸ்மிருதி போதிக்கும் என பல்கலைக் கழகம் கூறுகிறது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *