* குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஒத்துழையுங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
* விவசாயிகளின் தேவைகளை அறிந்து திராவிட மாடல் அரசு உதவுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைப்பு, விடுதி மேம்பாடு குறித்து பிரதமருக்கு ராகுல் கடிதம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பட்டியல் ஜாதி இட ஒதுக்கீட்டில் துணை வகைப்பாடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ‘மிகவும் ஓரம் கட்டப்பட்டவர்களுக்கு நியாயமான பங்கு கிடைப்பதை’ உறுதி செய்தது: ஆக்ஸ்போர்டு யூனியனில் ஆற்றிய உரையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு.
*பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு: 2029 மக்களவைத் தேர்தலில் பெண்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி என தகவல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் 33 தவறுகள்: ”இத்தனை பொய் கூறும், இவ்வளவு தவறுகளை செய்யும், மக்களை சிக்க வைக்கும், இளைஞர்களை ஏமாற்றும், ஏழைகளை சிக்க வைத்து வாக்குகளை பெறும் ஒரு பிரதமரை நான் பார்த்தது கிடையாது”. காங். தலைவர் கார்கே விமர்சனம்.
தி இந்து:
* கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கொல்ல முயற்சிக்கிறது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம். முதன்மை கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS) செயல்படுத்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக, 2025-2026 நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசு அதன் வருடாந்திர ஒதுக்கீட்டில் 60 சதவீதம் ஆக குறைத்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மனுஸ்மிருதி மாணவர்களுக்கு வழிகாட்டியாம்! டில்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜாதி மற்றும் திருமணம் சமூகத்தை எவ்வாறு நாகரிகப்படுத்துகிறது, ஒழுக்கங்கள் நடத்தையை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பது குறித்த பாடநெறியை மனுஸ்மிருதி போதிக்கும் என பல்கலைக் கழகம் கூறுகிறது.
– குடந்தை கருணா