புரட்சி மலர்கிறது என்றால் காலம் மக்களை விழிக்கச் செய்கிறது என்றுதான் அர்த்தம். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சிப் பெருகி வருகிறது என்றுதான் அர்த்தம். அறிவு மேலிட மேலிடச் சமுதாய அமைப்பில் உள்ள கோளாறுகளும், குறைபாடுகளும் தெரியவந்து அவைகளை ஒழிப்பதற்கான முயற்சி, அவ்வமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சி துவக்கமாகிறது. இம்முயற்சியையே நாம் புரட்சி என்கின்றபோது, புரட்சிகளால் மக்களிடையில் துவேஷம் வருவதாக கூப்பாடு போடுவோரைப் பற்றி என்னவென்று சொல்வது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’