அருப்புக்கோட்டை, ஜூன் 12- அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில், 08.06.2025 ஞாயிறு காலை 10 மணியளவில், விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணித் தலைவர் ஆ.சாந்தி தலைமையில், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மகளிரணிச் செயலாளர் பொன்மேனி ராஜயோகம் அனைவரையும் வரவேற்றார்.
மாநில மகளிரணித் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி கூட்ட நோக்கங்கள் குறித்தும், மகளிரணி அமைப்பு பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இல்லந்தோறும் மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதெனவும், மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழ் பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்ப்பதெனவும், இயக்க வெளியீடுகள் வாங்கிப் பரப்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர், நகரச் செயலாளர் பா.இராசேந்திரன், ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, நகர இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், சங்கர்ராஜ், சி.முத்துராமு, கி.தங்கநிலா மற்றும் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பொன்மேனிராஜயோகம் பெரியார் பிஞ்சு இதழ் சந்தா வழங்கினார்.