‘‘பெரியார் உலக நிதி’’ – எம் வேண்டுகோளுக்கு வேகமாகப் பலன் கிடைத்து வருகிறது! ‘‘பெற்றது கை மண்ணளவு – பெற வேண்டியது உலகளவு!’’ – விரைவீர், திரட்டுவீர்!

2 Min Read

திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் பெரியார் உலகத்தின் கட்டுமானப் பணிகள் தொய்வ டையக் கூடாது என்பதால், கடந்த 30.5.2025 அன்று நான், நமது பெரியார் பற்றாளர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் உள்ள பெருமக்களிடம், பெரியார் தொண்டறத்தின் பெருமை – சிறப்பை, காலத்தைத் தாண்டி, இனிவரும் தலைமுறையினரின் நினைவில் நீங்காது நிற்கச் செய்யவேண்டும் என்பதற்காக, அப்பணிக்கான அறக்கொடையை அவசரமாக வழங்கிடவேண்டுமென்று விடுத்த கனிவான வேண்டுகோளை  ஏற்றும், நம் பணியை ஊக்கப்படுத்தி, உற்சாகம் குறையாமல் முடிக்க விருப்பதற்காவும், நமது கொள்கைக் குடும்ப உறவுகள் உடனடியாக வாரி, வாரி வழங்க வழங்க முன்வந்துள்ளனர் – எப்படி நன்றி செலுத்துவது என்றே தெரியவில்லை, திகைக்கிறோம்!

‘‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே போல’’,

எனது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!

‘‘எனது தாத்தா, பாட்டியின் பங்களிப்பும் இந்த மகத்தான பெரியார் உலகத்தில் ஒரு சிறு துளியாக இருக்கிறது’’ என்ற வரலாற்று வைர வரிகளை எழுதிடவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள நன்கொடை தரும் குடும்பங்களுக்கு எனது கடமை உணர்வுடன் தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!

‘‘பெற்றது கைமண் அளவு –

பெறவேண்டியது உலகளவு’’

கோ.அரங்கசாமி – ராஜம் குடும்பத்தின் சார்பில், மருத்துவர் மீனாம்பாள் சந்திரகுமார் ரூ.2 லட்சம், வேல்விழி இராமச்சந்திரன் ரூ.2 லட்சம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் (சென்னை, 12.6.2025).

என்ற புதுமொழிப்படி, அறிவித்தவர்கள் இதுவரையில் 23 லட்சங்களை இந்த ஒரு  வாரத்தில் அனுப்பி, ஊக்கச் செயலிகள்போல் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். (சில கடிதங்கள் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வெளிவந்துள்ளன).

ஆகஸ்ட் முதல் தேதிக்குள் எனது சிறிய நிதி திரட்டல் ‘கோட்டாவை’ நிறைவு செய்ய 2 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு 200 பேர் கூடவா கிடைக்கமாட்டார்கள் என்று நாம் வைத்த நம்பிக்கை,  நன்னம்பிக்கையாகி வருகிறது!

நன்கொடையைத் திரட்டுவீர்
கொள்கை உறவுகளே!

விரைந்து செயலாற்றி  ‘தருக்களாகி’ தருவோரைத் தேடித் தேடிக் கண்டு நன்கொடையைத் திரட்டுவீர் கொள்கை உறவுகளே!

‘‘நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது!

வேறு எவராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!’’

என்றும், உங்கள் தொண்டன்,

தோழன்,

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
12.6.2025       

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *