கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.6.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

*கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கருநாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். 2016-ஆம் ஆண்டில் கருநாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத்து,  ஒக்கலிகர் சமுதாய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கக் கூடாது என பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தின.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் (யாதவ்) மீதான ”இந்த நாடு ஹிந்துஸ்தான் நாடு” என்ற மத வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநிலங்களவை குழு அமைக்க வாய்ப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை ஒழிப்பதை தமிழ்நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது, இது குறித்து தமிழ்நாடு திட்டக்குழு நிலையான வளர்ச்சி இலக்குகள், (SDG) தொலைநோக்கு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.

தி இந்து:

* அய்க்கிய நாடுகள் சபையின் (UNFPA) புதிய புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2025 ஆம் ஆண்டில் ரூ.146 கோடியாக இருக்கும் என்றும், இது உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் எதிர்பார்க்கப்பட்ட அளவை விடக் குறைந்து உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

* தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கிய புதிய சமூக அறிவியல் பாட புத்தகங்கள் “பழைய வறுமை மற்றும் காலனித்துவ கதைகளைக் கொண்டிருக்கவில்லை” என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC) உறுப்பினரும், NCERTயின் பாடத்திட்டப் பகுதி குழுப் பொருளாதாரத்தின் தலைவருமான சஞ்சீவ் சன்யால் கூறினார்.

தி டெலிகிராப்:

* பாஜகவின் பதவிக்காலத்தில் பாதிகாலம், மக்களவையில் துணை அவைத் தலைவர் இல்லை: காலியாக உள்ள பதவி குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நினைவூட்டல்

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *