சென்னை, ஜூன்.11- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்குங்கள் என்று ஒன்றிய அர சுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளி களில் படிக்க வழிவகை செய்யும் வகையில், கட்டாய உரிமை கல்வி சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்தனர்.
நிதி ஒதுக்கவில்லை
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களைச் சேர்க்கும் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனாலும், அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கி வருகிறது. நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது” என்று வாதிடப்பட்டது.
ஒன்றிய அரசு தரப்பில், “புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களை ஏற்று ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட மறுத்து விட்டது. அதனால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக்கட்டண தொகை ஒதுக்கப்பட்டவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (10.6.2025) பிறப்பித்தனர். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
நிதி ஒதுக்க வேண்டும்
அனைத்து தரப்பு மக்களையும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. எனவே இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கி ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உள்ளன. கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை தேசிய கல்விக்கொள்கை மற்றும் சமக்ர சிக்ஷா திட்டத்துடன் இணைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை உடன டியாக வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அது தொடர்பாக எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. 2024-25-ம் நிதியாண் டில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட் டுக்கு ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப் பட்ட வேண்டும். இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.2 ஆயிரத்து 151 கோடி ஆகும். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.200 கோடி வழங்க வேண்டும். எனவே, இந்த ரூ 200 கோடியை ஒதுக்கி கொடுப்பதில் ஒன்றிய அரசுக்கு எந்த சிக்கலும் இருக்காது. இந்த தொகையை சட்டப்படி தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டும்.
சமக்ர சிக்ஷா திட்டம்
இதற்காக கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, சமக்ர சிக்ஷா திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்தும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். அதேநேரம், ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்காமல் காலம் தாழ்த்தக் கூடாது. உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.