பா.ம.க. இடையே ஏற்பட்ட மோதல் போக்கு மாற
யாகம் நடத்துகிறார்களாம்!
தஞ்சாவூர், ஜூன்.11- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு மாறி சுமுக நிலை ஏற்பட தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் மங்கள ஆதித்ய மகா யாகம் நடந்ததாம். தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் நடந்த இந்த யாகத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனராம்!