‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கிய தோழரின் உணர்ச்சிக் கடிதம்

viduthalai
1 Min Read

‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்லி தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை உலகம் முழுவதும் பரப்புகின்ற பணியில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தாங்கள் ‘விடுதலை’யில் ஒரு உருக்கமான அறிக்கை வெளி யிட்டு இருந்தீர்கள்.

திராவிட இனத்திற்குத் திசைகாட்டியாக விளங்கப் போகிற, திருச்சி சிறுகனூரில் உருவாகிற ‘பெரியார் உலகம்’ கட்டடப் பணிக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அறிக்கை. பெரியார் தொண்டால் பயன் பெற்றவர்கள் நன்றி காட்ட வேண்டிய நல்ல வாய்ப்பு இது.

எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக,

முதல் நன்கொடை – ரூ.25,000

இரண்டாவது நன்கொடை – ரூ.1,00,000

மூன்றாவது நன்கொடை – ரூ.1,00,000  (6.6.2025)  அன்று கொடுத்துள்ளோம்.

இனிவரும் காலத்திலும் வாய்ப்பு இருக்கும்போது நன்கொடை கொடுப்போம் என்று உறுதி கூறுகிறேன்.

நன்கொடை கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் நம் இயக்கக் குடும்பங்களைச் சேர்ந்த நன்கொடைத் தோழர்கள் விரைந்து 1 மாதத் திற்குள் கொடுத்தால் ‘பெரியார் உலகம்’ பணிகள் விரைவாக நடைபெறும்.

‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது;

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’

என்று அய்யா தாங்கள் சொல்லும் வைர வரி களுக்கு ஏற்ப தோழர்கள் விரைந்து தர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

நன்கொடைத் தோழர்கள் விரைந்து நன் கொடையை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அய்யா அவர்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.

நன்றி. வணக்கம்.

– மு. அய்யனார்

தஞ்சை மாவட்டக் காப்பாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *