பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் உலக நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

3 Min Read

அரூர், ஜூன் 11- அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் 7-6- 2025 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கு. தங்கராஜ் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலை வர் பாவலர் பெரு.முல்லையரசு, கடத் தூர் ஒன்றிய செயலாளர் சிந்தை பச்சை யப்பன், கடத்தூர் நகரத் தலைவர் இரா.நெடுமிடல், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவர் பொன். அய்யனார் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

நிகழ்ச்சியின் முன்னதாக கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை கடவுள் மறுப்பு கூறி கருத்துரை வழங்கினார். கூட்டத்தின் நோக்கத்தை பற்றி மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி தொடக்க உரையாற்றினார்.

இறுதியாக ஜூலை 4 ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெறும் பெரியார் உலகத்திற்கான நிதியளிப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பெரியார் உலகத்திற்கு அதிக நிதி சேர்த்து அளிப்பது குறித்து கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர் த.மு.யாழ்திலீபன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பெ. கல்பனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா, பாடகர் வளர்மதி, அரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சஞ்சீவன், அரூர் நகர பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கவிஞர் பிரேம்குமார், கடத்தூர் ஒன்றிய மாணவரணி தலைவர் வேப்பிலைப்பட்டி சூர்யா, தாதம்பட்டி மகளிர் அணி வேளாங்கண்ணி, ஓட்டுநர் சுரேசு ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

அரூர் கழக மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டியில் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் பெரியார் உலகத்திற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிப்பது, பொதுக் கூட்டத்தின் முன்னதாக கலை நிகழ்ச்சி நடத்துவது,அனைத்து கட்சியினர் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

நிதி அறிவித்தோர் பாப்பிரெட்டி பட்டியில் நடைபெறும் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பெரியார் உலகத்திற்கு நிதி அளிப்பதென அறிவிப்பு செய்தோர். மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி,-ஆசிரியர் ஜீவிதா குடும்பத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி குடும்பத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி குடும்பத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம், மாவட்ட கழக செயலாளர் கு. தங்கராஜ் ரூபாய் 25,000 என 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட கழக தலைவர் ஆ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் கூதங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் டி. சிவாஜி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, செல்லதுரை, மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக எழுத்தாளர் மன்ற தலைவர் பாவலர் பெருமுல்லையரசு, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பூங்குன்றன் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவர் பொன் அய்யனார் ஆகியோர் செயல்படுவார்கள் என்ன தீர்மானிக்கப்படுகிறது. இறுதியாக ஒன்றிய தலைவர் பொன். அய்யனார் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *