பள்ளிகளில் மருத்துவ முகாம்… சுகாதாரத்துறை உத்தரவு

1 Min Read

தமிழ்நாட்டில் திடீர் மழை, வெப்பம் அதிகரிப்பு என பருவநிலை மாறி வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்குமாறு மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சத்துணவு மய்யங்கள் மூடலா? அரசு மறுப்பு

25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மய்யங்களை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், இது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது. ஏற்கெனவே 2018, 2022இல் இதேபோன்ற பொய்யான செய்திகள் வெளியாகி, அதற்கு சமூக நலத்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு உண்மை காணும் பதிவு (TN fact check) கூறியுள்ளது. இதுபோன்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *