பள்ளிகளில் மருத்துவ முகாம்… சுகாதாரத்துறை உத்தரவு

viduthalai
1 Min Read

தமிழ்நாட்டில் திடீர் மழை, வெப்பம் அதிகரிப்பு என பருவநிலை மாறி வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்குமாறு மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சத்துணவு மய்யங்கள் மூடலா? அரசு மறுப்பு

25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மய்யங்களை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், இது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது. ஏற்கெனவே 2018, 2022இல் இதேபோன்ற பொய்யான செய்திகள் வெளியாகி, அதற்கு சமூக நலத்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு உண்மை காணும் பதிவு (TN fact check) கூறியுள்ளது. இதுபோன்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *