அழிவிலும் ஆக்கம் பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து இருக்கைகள்

1 Min Read

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகள், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் வழங்கப்பட்டது.

மறு சுழற்சி

சென்னை மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில், சுமார் 30 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாக உள்ளன. இவற்றை சேகரித்து மாநகராட்சி நிர்வாகம் மறுசுழற்சிக்கு அனுப்புகிறது.

இருக்கைகள்

இந்நிலையில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகளை, சென்னை மாநகராட்சிப் பூங்காக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், சங்க நிர்வாகிகள் பாபு சிறீனிவாசன், பி.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்று, மேயர் ஆர்.பிரியாவிடம் பிளாஸ்டிக் இருக்கைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கூடுதல் ஆணையர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக் குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *