செய்திச் சுருக்கம்

Viduthalai
2 Min Read

பரங்குன்றம் 3,000 ஆண்டு பழமையான தமிழ்ச் சொல்: சு.வெங்கடேசன் எம்.பி.

ஆயிரம் ஆண்டு பழைமையான திருப்பரங்குன்றம் மலை என அமித்ஷா கூறியதற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழைமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் ஸநாதனத்தின் சதி இருப்பதாகவும், சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் பாஜகவின் அரசியல் என்றும் அவர் சாடியுள்ளார்.

காட்டு விலங்காண்டித்தனம்

மனிதத் தலையுடன் சாமியாடியவர்கள் மீது வழக்கு

திருவிழாவில் மனித தலையுடன் சாமியாடியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை உப்பூர் சுடலைமாட சாமி கோயில் சாமக்கொடை விழாவில், சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சடலத்தில் இருந்து தலை, கை, கால்களை எடுத்து வந்து 5 சாமியார்கள் சாமியாடி உள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாமியார்கள் மீது வீரவநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரோனாவுக்கு அழிவில்லை: மருத்துவர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் 6,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் குறைந்தபட்சம் 200 தொற்றை தாண்டுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளார். இந்நிலையில், கரோனா வைரஸை அழிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அது மக்களுடன்தான் இருக்கும் என்றும் மழைக்காலம் தொடங்கினால் வைரஸ் பரவல் அதிகமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் ஸ்மார்ட் வகுப்பு ஒத்திகை: அரசு

பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடவுள்ளனர். இதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, அரசுப் பள்ளிகளில் உள்ள திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறையை தயாராக வைத்திருக்க பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியது.

அரசு வேலைவாய்ப்பில்
20 சதவீதம் முன்னுரிமை:
விதியில் திருத்தம்

தமிழ் மீடியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் விதியை தமிழ்நாடு அரசு திருத்தியுள்ளது. அதன்படி, 1ஆம் வகுப்பில் சேராமல் கல்வி உரிமை சட்டத்தின்கீழ், 2-8 வகுப்புகளில் தமிழ் மீடியம் சேர்ந்து படித்து பாஸ் பெறுவோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இந்த விதி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் தமிழ் எடுத்து படித்தோருக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக்கிலும் சிறப்பு துணைத் தேர்வு

 கோவி.செழியன் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணைத் தேர்வு நடத்திட மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தடுக்க உயர்கல்வித்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கையின்படி துணைத் தேர்வுக்கு வரும் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை  இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். – உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.

போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைத்  தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவுவடைந்த்து.  தமிழ்நாட்டில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன். அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *