மாணிக்கம் தாகூர் கேள்வி
மதுரை, ஜூன் 10 மதுரையில் அமித்ஷாவின் வருகையின் போது மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே காமிராக்கள் கொண்டு செல்லப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அலைபேசி காமிரா, உள்ளிட்ட எந்த காட்சிப்பதிவு மின் னணுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் அமித்ஷா கோவிலின் உள்ளே சென்றது முதல் அவர் வழிபாடு செய்வது வரை ஊடகங்களில் வெளியானது
இது தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஒரு விதியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார், இது தொடர்பான கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்குமா? என்றும் கேட்டுள்ளார்.