மதுரையில் அமித் ஷா 8.6.2025 அன்று பேசிய பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.
கூட்டணி ஆட்சி தான் அமையும் என பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதே சலசலப்புக்கு காரணமாகி இருக்கிறது. ஏற்கெனவே இப்படியொரு பேச்சு அடிபட்டபோது, அதிமுக தலைமையில்தான் ஆட்சி என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியிருந்தார். தற்போது அமித்ஷா நேரடியாக பேசி யிருப்பதால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கைபேசிக்கு மின்னேற்றம் போட்டு தூங்குறீங்களா?
செல்பேசியை சார்ஜ் போடும்போது சில தவறு களை செய்ய கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 100 சதவீதம் நிறைவு ஆனால்தான் சார்ஜரை நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 80 சதவீதம் இருக்கும் போதே எடுத்து விடலாம்.
இரவில் (சார்ஜ்) போட்டு விட்டும் தூங்கக் கூடாது. முழு இரவும் சார்ஜ் ஏறினால் அது பேட்டரியின் வாழ்நாளை குறைத்துவிடும். நீண்ட நேரமும் சார்ஜ் போடக் கூடாது. பேட்டரியை 0-க்கு கொண்டு செல்லாமல், 20 சதவீதத்திலியே சார்ஜ் போடுவது நல்லது.