தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதே வேளையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பல ஆண்டுகளாக காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ, பார்லிமென்டில் கூடுதல் எம்.பி.,க்களை பெற இருக்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 15 ஆண்டு காலமாச்சு. இதில் எந்த கட்டுப்பாட்டு நெறி முறைகளை பின்பற்றி, அதுக்கப்புறம் நடந்த நான்கு தேர்தல்கள்ல தி.மு.க. ஓட்டு கேட்டிருக்கும்ன்னு புரியலே… மக்கள் தொகை அதிகமாகி இருந்தாலும், இக்கட்சியோட 27 சதவீத ஓட்டுக்கு பாதகம் வராதே… பின் ஏன் இப்படி பயப்படுறாருன்னு புரியலியே?
‘தினமலர்’, 9.6.2025, பக்கம் 8
பதிலடி:
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.வுக்குக் கிடைக்கும் 27 சதவிகித வாக்குகள் குறையப் போவதில்லையே என்கிறது ‘தினமலர்.‘
கொட்டைப் பாக்கு விலை என்னவென்றால், பட்டுக்கோட்டைக்கு வழிகாட்டும் ‘தினமலரின்’ முட்டாள் தனத்தை என்னவென்று சொல்லுவது?