பட்டுக்கோட்டைக்கு வழியா?

1 Min Read

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதே வேளையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பல ஆண்டுகளாக காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ, பார்லிமென்டில் கூடுதல் எம்.பி.,க்களை பெற இருக்கின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 15 ஆண்டு காலமாச்சு. இதில் எந்த கட்டுப்பாட்டு நெறி முறைகளை பின்பற்றி, அதுக்கப்புறம் நடந்த நான்கு தேர்தல்கள்ல தி.மு.க. ஓட்டு கேட்டிருக்கும்ன்னு புரியலே… மக்கள் தொகை அதிகமாகி இருந்தாலும், இக்கட்சியோட 27 சதவீத ஓட்டுக்கு பாதகம் வராதே… பின் ஏன் இப்படி பயப்படுறாருன்னு புரியலியே?

‘தினமலர்’, 9.6.2025, பக்கம் 8

பதிலடி:

மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க.வுக்குக் கிடைக்கும் 27 சதவிகித வாக்குகள் குறையப் போவதில்லையே என்கிறது ‘தினமலர்.‘

கொட்டைப் பாக்கு விலை என்னவென்றால், பட்டுக்கோட்டைக்கு வழிகாட்டும் ‘தினமலரின்’ முட்டாள் தனத்தை என்னவென்று சொல்லுவது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *