* திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்து தோற்றவர்கள்!
*இப்போது முருகன் பெயரில் மதுரையில் மாநாடு நடத்துவதன் நோக்கம் என்ன?
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்து, அதில் தோல்வி கண்டவர்கள், இப்போது மதுரையில் முருகன் பெயரால் மாநாடு நடத்துவது அரசியல், பச்சையான அரசியல் – பொது அமைதியைக் குலைப்பது மதச் சுதந்திரம் அல்ல – சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய உள்துறை அமைச்சர் இதன் பின்னணியில் இருப்பது சட்டப்படியும், நியாயப்படியும் சரியானதல்ல – மக்களே, எச்சரிக்கை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றப் போகிறார்கள் என்று வடிகட்டிய பொய்யைப் பரப்பி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக் கலவரத்தையும், சட்டம்– ஒழுங்கு பிரச்சினையையும் உருவாக்கிட
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பல் திட்ட மிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி, இதே பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து கலவரத்தைத் தூண்டலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.–பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் திட்டமிட்டு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். ஆனால், மதுரை மக்களின் ஒற்றுமையின் முன்பு அவர்களின் முயற்சி தோற்றுப் போனது.
தி.மு.க. ஆட்சியை அசுரர்கள் ஆட்சி என்று குறிப்பிடும்
ஒன்றிய இணையமைச்சர்!
இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, கடந்த வாரம் மதுரைக்கு வந்து, ‘‘தி.மு.க. ஆட்சியை அகற்ற போராட்டங்களை இணைந்து நடத்துங்கள்’’ என்று பேசியிருப்பதோடு,
தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சியை ‘அசுரர்கள் ஆட்சி’ எனவும், அதை எப்படியாவது அகற்றி, தங்களது பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியாக வேண்டுமெனவும் இணையமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.
இதற்கு தி.மு.க. தரப்பில், அதன் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளனர்.
பல ‘உத்திகள்’ தங்களுக்குக் கை கொடுக்க வில்லை என்றவுடன், புதிதாக ‘முருக பக்தர்கள் (வேடம் தரித்த) மாநாடாம்!’
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு, வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடல் என்னும் இடத்தில், ஜூன் 22 ஆம் தேதி நடத்துகிறார்களாம்!
அதற்குமுன் இன்று (10.6.2025) முதல் 24.6.2025 ஆம் தேதிவரை மதுரையில் வண்டி யூர் அருகே முருகனின் அறுபடை வீடுகள் போன்று சித்தரித்து, பூஜை, புனஸ்காரம் செய்து, கூட்டம் சேர்த்துக் காட்டி, அங்கே பக்திக்காக பாமர மக்களையும், ‘திட்டமிட்டே வழக்கமாகத் திரட்டிவரும்’ கூட்டத்தினை வைத்து, (‘இனமலரின்’ ஒப்புதல் வாக்குமூலம் காண்க, பக்கம் 6) மதக் கலவரச் சூழலை ஏற்படுத்திட முயலுகின்றனர்!
மதக்கலவரத்தைத் தூண்டிட முயற்சி!
முன்கூட்டியே அடிநீரோட்டமாக ஒரு வியூகத்தை வகுத்துள்ளதை தமிழ்நாடு அரசு காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு அறிந்து, அந்த மாநாடு நடந்தால், பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால், அனுமதியை மறுத்துள்ளது.
வழமைபோல சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்குத் தொடுத்துள்ளனர்!
மதச் சுதந்திரம், மத உரிமை என்பதைத் தங்களது அடிப்படை உரிமை என்று வாதாட முடியாது என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 கூறுகள் (Articles) தெளிவுபடுத்துகின்றன என்பதை மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறியாதவர்களாக இருக்க முடியாது.
இந்திய அரசமைப்புச் சட்டம்
என்ன கூறுகிறது?
‘‘Freedom of conscience and free profession, practice and propagation of religion, என்ற தலைப்பில்,
Article 25:
(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
(2) Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law—
(a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice;
(b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.’’
‘‘Freedom to manage religious affairs,
Article 26:
Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall
have the right-
(a) to establish and maintain institutions for religious and charitable purposes;
(b) to manage its own affairs in matters of religion;
(c) to own and acquire movable and immovable property; and
(d) to administer such property in accordance with law.
பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகா தாரம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இதர பிரிவுகளுக்கு உட்பட்டுத்தான் மத உரிமைகளைப் பயன்படுத்தவேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிவிட்டது!
கரோனா பரவிவரும் இந்த நேரத்திலா?
மதச் சுதந்திர உரிமை எங்களுக்கு உண்டு என்று சில பக்தர்களோ, பக்தியைப் பகடைக் காய்களாக்கி விளையாடும் அரசியல் மதவெறி யாளர்களோ வாதிட முடியாது! (மதச் சுதந்திரம் என்பது Absolute right அல்ல; நிபந்தனைகளுக்கு உட்பட்டதே அது).
மேலும், சுகாதாரம் (Health) கரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் ஆபத்தும் உண்டு.
2021 ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவ லின்போது இந்தக் கூறுகள்படி (Article 25, 26) கோவில் திருவிழாக்கள் தள்ளி வைக்கப்பட்டன; பூஜை, புனஸ்காரங்களுக்குக்கூட கட்டுப்பாடு விதிக்கவில்லையா?
கோவில்கள் ஆங்காங்கு தனித்தனியே ‘அறுபடை வீடுகள்‘ என்று ஆறு ஊர்களில் உள்ளனவே – அவற்றையெல்லாம் தி.மு.க. ஆட்சியில் மூடியா விட்டார்கள்?
உள்நோக்கத்தோடு, அதுவும் ‘வேலியே பயிரை மேய்வதுபோல’ நாடு முழுவதும் சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியைக் காக்க வேண்டிய உள்துறை அமைச்சராக உள்ள ஒருவரே, மதுரைக்கு வந்து, கலவரத்தைத் தூண்டிவிடுவதுபோல பேசுவது சட்டப்படியும் நியாயமா? ஏற்கத்தக்கதா?
இதில் மக்கள் நலமும், பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும், சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுவது நிச்சயம்!
அரசியல் – பச்சை அரசியல்!
கலவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு ஏற்கெனவே ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் முயன்று – தோற்ற நிலையில், அதனையே வேறு உருக்கொண்டு கலவரத்தைத் தூண்டுதல் போன்ற செயல்முறையை அனுமதிக்கலாமா? எனவே, நீதித் தராசு சாயாமல், தமிழ்நாட்டின் அமைதிக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாது தடுக்கப்படவேண்டும். வருமுன்னர் காப்பதுதானே முக்கியம்?
பக்திக்காக அல்ல இந்த நிகழ்வு!
‘‘அரசியல்’’, பச்சை அரசியல் என்பது எவருக்கும் புரியும்!
எனவே, கலவர முயற்சியை நீதித்துறை தடுப்பதற்கான வழிமுறையை, ‘‘ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செயல்பட்டு’’ நடைமுறைப்படுத்தவேண்டும். ‘‘பாண்டியன் நெடுஞ்செழியன் – கண்ணகி கதை’’யில் வழங்கிய தீர்ப்பையும் நாம் நினைவூட்டத் தேவையில்லை.
நமது நீதிபதிகள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட – இந்திய அரசமைப்புச் சட்டக் கூறுகள் மதிக்கப்பட்டு, காப்பாற்றப்படுவது அவசியம்! அவசரம்!!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.6.2025