நாகர்கோவிலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

Viduthalai
1 Min Read

ஒழுகினசேரி, ஜூன் 10- கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் நோக்கவுரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.மாவட்டதுணைத்தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு,மாவட்டதுணைச்செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், பொதுக்குழு மு.இராசேகர்,ஞா.பிரான்சிஸ், கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் வில்லுக்குறி செல்லையா,ஏ. ச.காந்தி, பெனடிக் ஆகியோர் மாநாடு சிறக்க நன்கொடை அறிவித்தார்கள்.

கழக தோழர் க.யுவான்சுவின் தாயார் இ.இசபெல்லா, கடுக்கரை தோழர் ந.தமிழ் அரசனின் தந்தையார் நடராசன் ஆகியோருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, சூலை 11 இல் நாகர்கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு திறந்த வெளி மாநாட்டினை எழுச்சிகரமாக நடத்துவது, அந்த மாநாட்டில் பங்கேற்க வரும் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது, சென்னையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை முழுமனதாக வரவேற்று குமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *