ஒரு போதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது – திருமாவளவன்

1 Min Read

தமிழ்நாடு

திருச்சி,நவ.13- இந்து சமய அற நிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணா மலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என தொல். திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான தொல்.திருமாவளவன்  நேற்று (12.11.2023) விமானம் மூலம் திருச்சி சென்றார். அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- 

டிசம்பர் மாதம் 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப் பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் இந்தியா கூட்டணி சார்பில் தேசிய அளவிலும் தலைவர்களையும் அழைக்க உள் ளோம். குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்களான இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சீதாராம்யெச்சூரி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலை வர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். பா.ஜனதா கூட்டங்களில் பெரும் பாலும் அ.தி.மு.க., பா.ம.க.வினர்தான் பங்கேற்கிறார்கள். இதில் ஒரு சதவீதம் கூட பா.ஜனதாவினர் கிடையாது. அவர்கள் கூட்டணி கட்சி மற்றும் ஜாதி அமைப்புகளிடம் இருந்து ஆள்பிடிக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் சிலை அகற்றப்படும். இந்து சமய அற நிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். தமிழ் நாட்டில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்றவும் முடியாது. அண்ணாமலை பரபரப்புக்காக இவ்வாறு பேசி வருகிறார். இது தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ் உலகப்புகழ் பெற்ற மொழி. பிரதமர் மோடி வருவதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் தமிழ் பரவிவிட்டது. அண்ணாமலை இதுபோன்று பேசு வதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டி.என்.ஏ. பரிசோதனை நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு சிலர் ஒத்துழைக்க மறுப்பதாக கூறப் படுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.” -இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *