அதிர்ச்சித் தகவல் அறுபது விழுக்காடு பேர் அதீத வெப்பம் சார்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பருவகாலங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகளை எதிர்கொள்ளுதல், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விழிப் புணர்வுடன் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி – பதில் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல் கலைக் கழக துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமையிலான குழுவினர் 3,217 பேரிடம் அத்தகைய ஆய்வை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வு முடிவுகளில் தெரிய வந்ததாவது: சமூகத் தில் வெப்ப வாதம் மற்றும் அதுசார்ந்த பாதிப்புகள் குறித்த புரிதல் எந்த அளவு உள்ளது என்பதை அறிய இந்த ஆய்வு முன் னெடுக்கப்பட்டது. 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். பருவநிலை மாற்றம் மற்றும் திடீரென அதிகரிக்கும் கோடை வெப்ப சூழல்களால் நீர்ச்சத்து இழப்பு, வெப்ப வாத பாதிப்புகளுக்கு 46 சதவீதம் பேர் உள்ளாகின்றனர்.

80 சதவீதம் பேர் வெப்ப நிலை அதிகரிக்க பருவநிலை மாற்றங்களே பிரதான காரணம் என அறிந்துள்ளனர். ஆனால், அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் அவர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே வெப்ப வாதத்தின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகளை உணர்ந்திருக்கின்றனர்.

ஆய்வில் பங்கேற்றவர் களில் 50 சதவீதம் பேருக்கு அதீத வெப்பத்தை எதிர் கொள்வதற்கான மாற்று இடங்களோ, குளிர்வான இடங்களோ இல்லை. அதேபோல், வெப்ப அலை தொடர்பான வெளி யிடப்படும் அறிவுரைகள் 29 சதவீதம் பேருக்கு புரிவ தில்லை. ஏழை, எளிய மக்கள், முதியவர்கள், குழந் தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வெப்ப அலை பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. தடையற்ற மின்சாரம், குடிநீர் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்யமுடியவில்லை.

இதுதொடர்பாக துணை வேந்தர் மருத்துவர் நாராயணசாமி கூறுகையில், “பொது மக்களிடையே, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான அடிப்படை வசதிகளை உறுதிபடுத்த வேண்டிய நிலை இருக்கிறது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *